"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

உறுப்பினர் சந்திப்பு நிகழ்ச்சி கொல்லாபுரம் கிளை1-2

அஸ்ஸலாமு அலைக்கும்

கொல்லாபுரம் கிளை 1 மற்றும் கிளை 2ம் இணைந்து உறுப்பினர் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் கிளை 1 தலைவர் அக்பர் அலி தலைமையில்
கிளை 1 செயலாளர் ஜெகபர் அலி ,
கிளை 1 பொருளாளர் ஹாஜி முஹம்மது
கிளை 1 துணை தலைவர் பக்கிர் மைதீன் ,
கிளை 2 செயலாளர் குத்துபுதீன்
கிளை 2 பொருளாளர் அஸ்லம் முன்னிலையில் நடைபெற்றது

துவக்க உரை கிளை 1 தலைவர் அக்பர்

கிளை 1 செயலாளர் ஜெகபர் அலி கடந்த மாதம் தாவா பணிகளின் பட்டியலை வாசிக்கப்பட்டது

கிளை 2 செயலாளர்  கிளை புதிதாக தொடங்கப்பட்டது முதல் அக்டோபர் மாதம் வரையுள்ள தாவா மற்றும் சமுதாய பணி குறித்த தகவல்கள் தெரிவித்தார்.

கிளை 1 பொருளாளர் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் அக்டோபர் மாதம் வரையுள்ள வரவு செலவு சமர்பித்தார்.

கிளை 2  பொருளாளர் கிளை புதிதாக தொடங்கப்பட்டது முதல் அக்டோபர் மாதம் வரையுள்ள தாவா மற்றும் சமுதாய பணிகாக பொருளாதாரம் பான்ஸர் மூலமாக பெறுவதாக கூறினார்

கிளை 1 துணை தலைவர் உறுப்பினர்களின் குறைகளை கேட்டரிந்து அதற்கான பதில்களை நிர்வாகம் கொடுத்தது மற்றும் தாவா பணியில் முக்கியதுவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை 1 மற்றும்
கிளை 2

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.