"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

முக்கிய அறிவிப்பு !


வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் இஸ்லாமிய பொதுக்கூட்டம் 09/06/2013 அன்று நடைபெற கூடாது என்று கொல்லாபுரம் சுன்னத் ஜமாஅத்  தலைவர்கள் - பேரளம் காவல் நிலையத்தில் ,காவல்துறை அதிகாரி , திருவாரூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் மற்றும் நன்னிலம் வட்டாச்சியர் - யை சந்தித்து 29/05/2013 அன்று மணு கொடுத்துள்ளனர் ,

அதனைதொடர்ந்து காவல்துறை அதிகாரி இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தார்கள் , இதில் TNTJ மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களுடைய நிலைபாட்டை எடுத்து கூறினார்கள் 
இதில் இரு தரப்பினரிடையே உடன்பாடு  ஏற்படாததால் ,

இன்ஷாஅல்லாஹ், 03/06/2013 அன்று மாலை 4 மணிக்கு  நன்னிலம் வட்டாச்சியர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை 
(Peace  Meeting )நடைபெற இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ்  , நமது வெற்றிக்காக  துஆ செய்யவும் . 

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.