"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

இரத்ததான முகாம் ( கொல்லாபுரம் கிளை 2 )


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹூ.

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால்

#கொல்லாபுரம்_கிளை_2 சார்பாக இன்று 11-02-2018

#இரத்ததான_முகாம்
மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ.A.சக்கரை கனி அவர்கள் தலைமை தாங்கினார்கள்,
கிளை செயலாளர் M.குத்புதீன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்,

காரைக்கால் மாவட்ட பேச்சாளர்
#சகோ_முஹம்மது_யூசுப்_MISc அவர்கள் இஸ்லாம் கூறும் மனித நேயப்பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

திருவாரூர் மருத்துவ கல்லூரி Dr.v.விஐயராம் MBBS அவர்கள் இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினார்,

திருவாரூர் மருத்துவ கல்லூரியின் இரத்தவங்கி ஆலோசகர் Dr.A.லதா அவர்கள் இரத்தம் கொடுப்பதின் நன்மையை பற்றி உரையாற்றினார்.

இறுதியாக கிளை-2 மருத்துவரணி செயலாளர் சகோ.முஹம்மது அசாருதீன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

இதில் ஆண்கள்,  பெண்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் மொத்தம் சுமார் 30 நபர்களுக்கும் மேல்  கலந்துக்கொண்டு இரத்தம் கொடுத்தனர்.

#அல்ஹம்துலில்லாஹ்

https://m.facebook.com/story.php?story_fbid=1606135166136249&id=156319654451148

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#கொல்லாபுரம்_கிளை_2
#திருவாரூர்_வடக்கு_மாவட்டம்

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.