இன்ஷாஅல்லாஹ்!
இந்த ஆண்டு ஹஜ் செல்ல விரும்புபவர்கள் மார்ச் 20 க்குள் (20.03.2013) விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:இந்த ஆண்டு 2013 ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் விண்ணப்ப படிவங்களை எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.அல்லது இதற்கான விண்ணப்பத்தை www.hajcommittee.com என்ற இணையlaதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மனுதாரர்கள் வரும் மார்ச் 20ம் (20.03.2013) தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு முன் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.The last date for submission of of Hajj application is 20th March 2013.
For more details pls visit http://www.hajcommittee.com/