"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

திருவாரூர்  மாவட்டம் , TNTJ கொல்லாபுரம்  கிளை  சார்பாக  23.10.2011 அன்று 
"இஸ்லாம்  ஓர்  எளிய  மார்க்கம்"  நிகழ்ச்சி  நடைபெற்றது,
இதில்  மாநில  செயலாளர்  அஷ்ரப் தீன் பிர்தௌசி  அவர்கள்  இசுலாமியர்களின் மார்க்கம் சம்மந்தமான  சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு  விளக்கம்  அளித்தார்கள் ,
 
அதனை  தொடர்ந்து  குர்ஆன் & ஹதிஸ்  திறன்  ஆய்வு  போட்டிக்கான  பரிசளிப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது,
வெற்றிபெற்றவர்கள்  மற்றும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு  பரிசுகளை கிளை  நிர்வாகிகள்  & அஷ்ரப் தீன் பிர்தௌசி பரிசுகளை வழங்கினார்கள்  .













எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.