"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

பொதுக்குழு

அல்லாஹ்வின் திருபெயாரால் ...
30 - 10 - 2010 - சனி
                          2010 - ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30௦ ந் தேதி மாலை 4 : 30 மணிக்கு சகோதரர் A.S.அலாவுதீன் அவர்கள் இல்லத்தில் மாவட்ட பொருப்பாளர்கள். 1 . பொருளாளர் ஹாஜா மைதீன் , 2 . செயலாளர் பகுருதீன் , இவர்களின் தலைமையில் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் கலந்து பேசி ஆலோசிக்கப்பட்டு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கொல்லாபுரம் கிளையின் முன்னாள் நிர்வாகிகளை (நிர்வாகத்தை )கலைத்துவிட்டு மாவட்டத்து செயலாளர் பகுருதீன் அவர்களை முன்னிலையில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்டது ,

தலைவர்: A .ஹாஜி முஹம்மது த/பெ ஹசன் முஹம்மது
துணை தலைவர்: S.M.சர்புதீன் த/பெ சுல்தான் முஹம்மது
செயலாளர் : M .அக்பர் அலி த/பெ முஹம்மது ஹனி
துணை செயலாளர் : S.நிஜாமுதீன் த/பெ S.M.சர்புதீன்
பொருளாளர் : M.ஹலிகுல் ஜமான் த/பெ முஹம்மது ஜக்கரிய

மேலும் கிழ்க்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டது

தீர்மாணங்கள்:-

1 . புதிய பள்ளிவாசல் பணியினை இன்ஷாஅல்லாஹ் மூன்று மாதத்திற்குள் கட்டி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

2 . திருவாரூர் மாவட்ட மாநாட்டிற்கு கொல்லாபுரதிலிருந்து அணைத்து மக்களையும் அழைத்து செல்வது

3 . தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், கொல்லாபுரம் கிளையின் அணைத்து வங்கி கணக்குகளையும் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட தற்போதைய நிர்வாகிகள் 1 .தலைவர்: A .ஹாஜி முஹம்மது த/பெ ஹசன் முஹம்மது , 2 . செயலாளர் : M .அக்பர் அலி த/பெ முஹம்மது ஹனி, 3 . பொருளாளர் : M.ஹலிகுல் ஜமான் த/பெ முஹம்மது ஜக்கரிய இவர்கள் இணைந்து செயல்படுவது என்று தீர்மாணிக்கப்பட்டது.

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.