"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

அல்லாஹ்வின் திருபெயரால் ...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

                          06 ஏப்ரல் 2008 , ஞாயிற்றுக்கிழமை , மாலை 6 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொல்லாபுரம் கிளை, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.
                     
செப்டம்பர் 26 , 2008 அன்று அல்லாஹ்வின் பேரருளால் திருவாரூர் மாவட்டம், கொல்லாபுரம். 9A/22, A4, மெயின் ரோடு, சராபுதீன் பண்ணையில் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கொல்லாபுரம் கிளை அலுவலகம்,நூலகம் மற்றும் கல்வி கலாச்சார மர்கஸ் துவங்கப்பட்டது.

அதில் ஐந்து வேளை தொழுகை ,ஜும்மா தொழுகை, வாரந்தோறும் பெண்கள் பயான் மற்றும் மாணவர்கள் தர்பியா நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.....
2008  ஆம் வருடம், ரமலான் பிறை 26 முதல் 29 வரையில் இரவு தொழுகை நடைபெற்றது, ஒற்றைபடை இரவுகளில் தொழுகை , சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் சஹர் விருந்து உபசரிப்பும்  நடைபெற்றது இதில் எராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.

TNTJ - கொல்லாபுரம் கிளை சார்பில் 2008 பித்ரா அன்பளிப்பு.

     கொல்லாபுரம், நெடுங்குளம், பவட்டக்குடி, ஒன்பத்துவேலி, மேனங்குடி, பேரளம் ஆகிய ஊர்களில் உள்ள இசுலாமிய அன்பர்களுக்கு  வழங்கப்பட்டது.

2008 நோன்பு பெருநாள்  தொழுகை

       அக்டோபர் 01 , 2008 நோன்பு பெருநாள்  தொழுகை சராபுதீன் பண்ணையில் சரியாக காலை 7.30 மணிக்கு   நடைபெற்றது, அம்பை பைசல் நோன்பு பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் உரை நிகழ்த்தினார் . சுமார் 240 ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டார்கள் .


2008 ஆண்டு , ரமலான் மாத நிகழ்ச்சிகளின் தொகுப்பு .... 




கிளையின் சமுதாய பணிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் .... 









மாணவர் தர்பியா நிகழ்ச்சி புகைப்படங்கள்  (29/03/2009)



 




2009 , சமுதாய பணிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள்















```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஹிஜ்ரி 1430 (2009 ) - ரமலான் நிகழ்ச்சிகள் 
  





2009, கிளையின் மருத்துவ உதவிகள்

31/08/2009 - கம்பூர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்களுக்கு  மருத்துவ உதவி


22/10/2009 - கொல்லபுரத்தில் பணியாற்றிய அரபி ஆசிரியை சுலைஹா அவர்களின் மகள் கிலோபர் மருத்துவ உதவி






18/10/2009 - திருக்குர்ஆன் திறனாய்வு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி





திருக்குர்ஆன் திறனாய்வு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியை  தொடருந்து விருந்து  நடைபெறுகிறது







ஹிஜ்ரி 1430 , ஹஜ்ஜு பெருநாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு
பக்கீர் மைதீன்  அவர்கள் பெருநாள் உரையாற்றுகிறார்  





கூட்டு குர்பான் விநியோகம்

இறைச்சி பங்கீடல்






எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.